×

ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில் நாங்குநேரி தொகுதியில் ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

நெல்லை, ஜூன் 20: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நம்பி கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டை காமராஜ் நகரில் அமைந்துள்ள உதவும் கரங்கள், வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மகாராஜநகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நாங்குநேரி பெரும்பத்து விலக்கு பகுதியிலும் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பிரசித்திபெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ கலந்து கொண்டார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்செல்வன், மாநில செயலாளர் ஜோதி, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வினோத் போத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோபால், பாளை. வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணைச்செயலாளர் கமலா, மாவட்ட பொதுச்செயலாளர் .நம்பிதுரை, கக்கன், மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம், நாங்குநேரி, களக்காடு வட்டார தலைவர்கள் அலெக்ஸ், கனகராஜ், காளப்பெருமாள், ரவீந்திரன், வாகைதுரை, ராமஜெயம், சங்கரபாண்டி, வட்டார பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, காங்கிரஸ் நகரத் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், முத்துகிருஷ்ணன், ரீமாபைசல், நாங்குநேரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல், சுந்தர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, ஏர்வாடி நகர செயலாளர் ஆபிரகாம், காங்கிரஸ் நிர்வாகிகள் சித்திரைவேல், பிலியன்ஸ், வின்சென்ட், அன்வர், வெள்ளைசாமி, ஆனந்தராஜன், ராமநாதன், முத்துராமலிங்கம், ஜெயசீலன், இளங்கோ, தங்கம், சதாசிவம், அருண், லட்சுமண், ராஜன், சுயம்பு, கவுன்சிலர் வனிதா காமராஜ், மீகா, மரியசாந்தி, மகளிர் அணி தலைவிகள் வசந்தா, லதா, பாலம்மாள், தேவி, பிரியா, விமலா, தங்கலெட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில் நாங்குநேரி தொகுதியில் ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Nanguneri ,Ruby Manokaran ,MLA ,Rakulkanthi ,All India Congress ,Nanguneri Assembly ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை